ஆசிரியர்களுக்கான EB Module (2-II) நிறைவு பெறுதலும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் - 2 ஆம் கட்டம் 27.06.2024 (வியாழக்கிழமை)
ஆசிரியர்களின் கௌரவத்தை நோக்கிய அடிப்படையில் காத்தான்குடி ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தில் இருந்து இவ்வருடம் E.B. நிகழ்ச்சி திட்டத்தை நிறைவு செய்த 170 ஆசிரியர்களுக்கான கௌரவிப்பு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கடந்தவாரம் ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையைத்தின் நிறைவேற்றுத்தர முகாமையாளரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான எ.றியாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பணிப்பாளர் எம்.எம்.ஜவாத் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன் கௌரவ அதிதிகளாக பிரதி கல்வி பணிப்பாளர்கள், கணக்காளர்கள் பொறியியலாளர்கள், விரிவுரையாளர்கள், ஏறாவூர் லயன்ஸ் அணியினர்கள் மற்றும் சமூக நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.