ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையம் திறந்துவைப்பு
அண்மித்த பாடசாலை சிறந்த பாடசாலை என்னும் திட்டத்தின் கீழ் காத்தான்குடியில் 34 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையம் இன்று(09) திறந்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடி கல்விக் கோட்டத்தில், இந்த ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஆரம்ப கைத்தொழில் மறறும் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் செய்யித் அலிஸாஹிர் மௌலனா கலந்து கொண்டு இந்நிலையத்தை திறந்து வைத்தார்.
பண்பு, அறிவு, வலுமிக்க, மனித நேய மாணவச் சந்ததியினரை உருவாக்கும் நோக்கில், கல்வியமைச்சின் “அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், இந்த ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் முன்னாள் மாகாணசபை உறுப்பினரும்,நகர திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சின் இணைப்புச் செயலாளருமான யு.எல்.எம்.என்.முபீன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக்,மட்டக்களப்பு மத்தி வலயக்கல்விப்பணிப்பாளர் Dr.SMMS.உமர் மௌலானா(SLEAS), மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்துக்கான ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தின் முகாமையாளர் எஸ்.சரிப்தீன் உட்பட மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் நிர்வாக உத்தியோகத்தர் ஆதம்லெப்பை, பிரதிக்கல்விப்பணிப்பாளர் அஜ்மீர்(SLEAS), பிரதிக்கல்விப்பணிப்பாளர் திருமதி.றிஸ்மியா பானு(SLEAS), காத்தான்குடி கோட்டக்கல்விப்பணிப்பாளர் ஹக்கீம்(SLEAS) உற்பட மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் உதவிக்கல்விப்பணிப்பாளர்கள்,ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் பாடசாலையின் அதிபர்கள் எனப்பலரும் கலந்து சிறப்பித்தனர்.
Click to Watch Video:
Comments
Post a Comment