Skip to main content

ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையம் திறந்துவைப்பு - 2019 செப்டெம்பர் 09

ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையம் திறந்துவைப்பு


PDCTKKY Opening



அண்மித்த பாடசாலை சிறந்த பாடசாலை என்னும் திட்டத்தின் கீழ் காத்தான்குடியில் 34 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையம் இன்று(09) திறந்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடி கல்விக் கோட்டத்தில், இந்த ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஆரம்ப கைத்தொழில் மறறும் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் செய்யித் அலிஸாஹிர் மௌலனா கலந்து கொண்டு இந்நிலையத்தை திறந்து வைத்தார்.

பண்பு, அறிவு, வலுமிக்க, மனித நேய மாணவச் சந்ததியினரை உருவாக்கும் நோக்கில், கல்வியமைச்சின் “அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், இந்த ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் முன்னாள் மாகாணசபை உறுப்பினரும்,நகர திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சின் இணைப்புச் செயலாளருமான யு.எல்.எம்.என்.முபீன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக்,மட்டக்களப்பு மத்தி வலயக்கல்விப்பணிப்பாளர் Dr.SMMS.உமர் மௌலானா(SLEAS), மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்துக்கான ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தின் முகாமையாளர் எஸ்.சரிப்தீன் உட்பட மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் நிர்வாக உத்தியோகத்தர் ஆதம்லெப்பை, பிரதிக்கல்விப்பணிப்பாளர் அஜ்மீர்(SLEAS), பிரதிக்கல்விப்பணிப்பாளர் திருமதி.றிஸ்மியா பானு(SLEAS), காத்தான்குடி கோட்டக்கல்விப்பணிப்பாளர் ஹக்கீம்(SLEAS) உற்பட மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் உதவிக்கல்விப்பணிப்பாளர்கள்,ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் பாடசாலையின் அதிபர்கள் எனப்பலரும் கலந்து சிறப்பித்தனர்.











Click to Watch Video: 


Source: ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையம் திறந்துவைப்பு

Comments

Popular posts from this blog

2-II ஆசிரியர்களுக்கான EB Module நிறைவு பெறுதலும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் - 28/02/2023 செவ்வாய்க்கிழமை

" ஆசிரியர்களை கௌரவிப்போம்." எனும் தொனிப்பொருளில் எமது காத்தான்குடி ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தில் இடம்பெற்ற ஆசிரியர்களைப் பாராட்டி, சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு 28/02/2023 -----------------------------------------------------------------------------------------------------------------------------இலங்கை ஆசிரியர் சேவையின் புதிய பிரமாணக் குறிப்பிற்கமைய 2-II தரத்திலுள்ள ஆசிரியர்களின் பதவியுயர்வுக்கான இரண்டாம் வினைத் திறமைகாண் தடைப்பரீட்சைகளின் இதவடிவங்கள் (Efficiency Bar Examination Module) நிறைவுபெறுதலும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் காத்தான்குடி ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தில் (காத்தான்குடி ஆசிரியர் மத்திய நிலையம்) 28/02/2023 செவ்வாய்க்கிழமைஅன்று முகாமையாளர் Mr. A. Riyas (SLTES) தலைமையில் இடம்பெற்றது..  மேலும் இந் நிகழ்விற்கு அதிதியாக, மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர்களான Mr. SMM. Ameer (SLEAS-I) அவர்களும் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஆரம்பப் பிரிவு ஆசிரிய ஆலோசகர்  Mrs. Thasleema Mohamed Rizvi (ISA) அவர்களும் கலந்து சிறப்பித்ததுடன் ...

ஆசிரியர்களுக்கான EB Module (2-II) நிறைவு பெறுதலும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் - 1ஆம் கட்டம் 25.06.2024 (செவ்வாய்க்கிழமை)

இலங்கை ஆசிரியர் சேவையின் புதிய பிரமாணக் குறிப்பிற்கமைய 2-II தரத்திலுள்ள ஆசிரியர்களின் பதவியுயர்வுக்கான இரண்டாம் வினைத் திறமைகாண் தடைப்பரீட்சைகளின் இதவடிவங்கள் (Efficiency Bar Examination Module) நிறைவுபெறுதலும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வின் முதலாம் கட்டம் காத்தான்குடி ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தில் (காத்தான்குடி ஆசிரியர் மத்திய நிலையம்) 25/06/2024 செவ்வாய்க்கிழமை அன்று முகாமையாளர் Mr. A. Riyas (SLTES) தலைமையில் இடம்பெற்றது..  Professional Development Center for Teachers - Kattankudy 

ஆசிரியர்களுக்கான EB Module (2-II) நிறைவு பெறுதலும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் - 2 ஆம் கட்டம் 27.06.2024 (வியாழக்கிழமை)

ஆசிரியர்களின் கௌரவத்தை நோக்கிய அடிப்படையில் காத்தான்குடி ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தில் இருந்து இவ்வருடம் E.B.  நிகழ்ச்சி திட்டத்தை நிறைவு செய்த 170  ஆசிரியர்களுக்கான கௌரவிப்பு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கடந்தவாரம் ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையைத்தின் நிறைவேற்றுத்தர முகாமையாளரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான எ.றியாஸ் அவர்களின் தலைமையில்  நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பணிப்பாளர் எம்.எம்.ஜவாத் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன் கௌரவ அதிதிகளாக பிரதி கல்வி பணிப்பாளர்கள், கணக்காளர்கள் பொறியியலாளர்கள், விரிவுரையாளர்கள், ஏறாவூர் லயன்ஸ் அணியினர்கள் மற்றும் சமூக  நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.