Skip to main content

நிறைவேற்று முகாமையாளராக பதவியேற்பு - January 02 2020

ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையம் - காத்தான்குடி (Professional Development Center for Teachers) இற்கான நிறைவேற்று முகாமையாளர் தனது கடமைப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார்...


மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஆசிரியர் வான்மை விருத்தி மத்திய நிலையத்திற்கு கல்வியமைச்சினால் புதிதாக நியமிக்கப்பட்ட நிறைவேற்று முகாமையாளர் தனது கடமைப்பொறுப்பினை ஏற்றுக்கொள்ளும் சம்பிரதாயபூர்வ நிகழ்வு வலயக் கல்விப்பணிமனையில் நடைபெற்றது.

புதிய முகாமையாளர் அசனார் றியாஸ் வலயக் கல்விப் பணிப்பாளர் உமர் மௌலானா முன்னிலையில் பணியினை ஏற்றுக்கொண்டார்.

Manager Duty Assum


இந்நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் உள்ளிட்ட கல்வித் திணைக்கள அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

இந்த ஆசிரியர் மத்திய நிலையத்தில் முகாமையாளராகப் பணியாற்றிய எஸ். சரீப்தீன் மரணமடைந்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு புதிய முகாமையாளர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கல்வி வலயத்திலுள்ள பாடசாலை ஆசிரியர்களது தொழில் வான்மையினை விருத்தி செய்யும் பணி ஆசிரியர் மத்திய நிலையத்தினூடாக நடைபெறுவதுண்டு. 

அந்த வகையில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் மூன்று கல்விக் கோட்டங்களிலுள்ள 77 பாடசாலைகளில் சுமார் 1800 ஆசிரியர்கள் பணியாற்றுவதாக கல்வி அபிவிருத்திக்கான பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்எச்எம். றமீஸ் தெரிவித்துள்ளார். 

புதிய முகாமையாளர் ஏறாவூரைச் சேர்ந்த அசனார் றியாஸ் இலங்கை கல்வியிலாளர் சேவை தரத்தையுடையவர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கல்வித்துறையை மேம்படுத்தும் எண்ணக்கருவின் கீழ் கிழக்கு மாகாணத்திலுள்ள ஆறு வலயங்களுக்கு நிறைவேற்று முகாமையாளர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


Click here to watch video: 

Source: நிறைவேற்று முகாமையாளராக பதவியேற்பு..



Comments

Popular posts from this blog

2-II ஆசிரியர்களுக்கான EB Module நிறைவு பெறுதலும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் - 28/02/2023 செவ்வாய்க்கிழமை

" ஆசிரியர்களை கௌரவிப்போம்." எனும் தொனிப்பொருளில் எமது காத்தான்குடி ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தில் இடம்பெற்ற ஆசிரியர்களைப் பாராட்டி, சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு 28/02/2023 -----------------------------------------------------------------------------------------------------------------------------இலங்கை ஆசிரியர் சேவையின் புதிய பிரமாணக் குறிப்பிற்கமைய 2-II தரத்திலுள்ள ஆசிரியர்களின் பதவியுயர்வுக்கான இரண்டாம் வினைத் திறமைகாண் தடைப்பரீட்சைகளின் இதவடிவங்கள் (Efficiency Bar Examination Module) நிறைவுபெறுதலும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் காத்தான்குடி ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தில் (காத்தான்குடி ஆசிரியர் மத்திய நிலையம்) 28/02/2023 செவ்வாய்க்கிழமைஅன்று முகாமையாளர் Mr. A. Riyas (SLTES) தலைமையில் இடம்பெற்றது..  மேலும் இந் நிகழ்விற்கு அதிதியாக, மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர்களான Mr. SMM. Ameer (SLEAS-I) அவர்களும் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஆரம்பப் பிரிவு ஆசிரிய ஆலோசகர்  Mrs. Thasleema Mohamed Rizvi (ISA) அவர்களும் கலந்து சிறப்பித்ததுடன் ...

ஆசிரியர்களுக்கான EB Module (2-II) நிறைவு பெறுதலும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் - 1ஆம் கட்டம் 25.06.2024 (செவ்வாய்க்கிழமை)

இலங்கை ஆசிரியர் சேவையின் புதிய பிரமாணக் குறிப்பிற்கமைய 2-II தரத்திலுள்ள ஆசிரியர்களின் பதவியுயர்வுக்கான இரண்டாம் வினைத் திறமைகாண் தடைப்பரீட்சைகளின் இதவடிவங்கள் (Efficiency Bar Examination Module) நிறைவுபெறுதலும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வின் முதலாம் கட்டம் காத்தான்குடி ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தில் (காத்தான்குடி ஆசிரியர் மத்திய நிலையம்) 25/06/2024 செவ்வாய்க்கிழமை அன்று முகாமையாளர் Mr. A. Riyas (SLTES) தலைமையில் இடம்பெற்றது..  Professional Development Center for Teachers - Kattankudy 

ஆசிரியர்களுக்கான EB Module (2-II) நிறைவு பெறுதலும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் - 2 ஆம் கட்டம் 27.06.2024 (வியாழக்கிழமை)

ஆசிரியர்களின் கௌரவத்தை நோக்கிய அடிப்படையில் காத்தான்குடி ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தில் இருந்து இவ்வருடம் E.B.  நிகழ்ச்சி திட்டத்தை நிறைவு செய்த 170  ஆசிரியர்களுக்கான கௌரவிப்பு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கடந்தவாரம் ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையைத்தின் நிறைவேற்றுத்தர முகாமையாளரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான எ.றியாஸ் அவர்களின் தலைமையில்  நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பணிப்பாளர் எம்.எம்.ஜவாத் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன் கௌரவ அதிதிகளாக பிரதி கல்வி பணிப்பாளர்கள், கணக்காளர்கள் பொறியியலாளர்கள், விரிவுரையாளர்கள், ஏறாவூர் லயன்ஸ் அணியினர்கள் மற்றும் சமூக  நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.