ஆசிரியர்களை கெளரவிப்போம்" எனும் தொனிப்பொருளில் எமது காத்தான்குடி ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தில் இடம்பெற்ற ஆசிரியர்களைப் பாராட்டி, சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு.
இலங்கை ஆசிரியர் சேவையின் புதிய பிரமாணக் குறிப்பிற்கமைய 2-I தரத்திலுள்ள ஆசிரியர்களின் பதவியுயர்வுக்கான மூன்றாம் வினைத்திறமைகாண் தடைப்பரீட்சைகளின் இதவடிவங்கள் (Efficiency Bar Examination Module) நிறைவுபெறுதலும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் காத்தான்குடி ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தில் (காத்தான்குடி ஆசிரியர் மத்திய நிலையம்) 11.10.2022 செவ்வாய்க்கிழமை அன்று முகாமையாளர் Mr. A. Riyas (SLTES) தலைமையில் இடம்பெற்றது..
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் Dr. SMMS. Umar Moulana (SLEAS) Sir அவர்கள் கலந்து கொண்டார்கள்.
மேலும் இந் நிகழ்விற்கு விசேட அதிதிகளாக, மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான Mrs. MJF. Rifka (SLEAS) (DDE - Administration), Mr. MHM. Ramees (SLEAS) (DDE - Development)
அவர்களும் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளரான Mr. AGM. Hakeem (SLEAS) அவர்களும் கலந்து சிறப்பித்ததுடன் ஆசிரியர் சேவையில் தரம் I இற்கு பதவி உயர்வு பெறும் ஆசிரியர்களை பாராட்டிக் கொளரவித்தார்கள்...
11.10.2022 செவ்வாயக்கிழமை காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகிய இந் நிகழ்வானது, மட்/மம/ அல்ஹிறா மகா வித்தியாலயத்தின் அதிபர், Mr. A. Sabry Sir அவர்களினால்
தொகுத்து வழங்கப்பட்டதோடு மதிய உணவின் பிற்பாடு பி.ப. 2.30 மணிக்கு நிறைவு பெற்றது...
மிகவும் குறுகியதொரு நாட்களுக்குள் மிகவும் நேர்த்தியாகவும், அழகான முறையிலும் ஏற்பாடு செய்து இந் நிகழ்வை சிறப்புற நடத்துவதற்கு அனைத்து வகையிலும் உதவிய ஏற்பாட்டுக் குழுவிற்கு எனது இதயபூர்வமான நன்றிகளும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்...
அத்துடன் தங்களது ஆசிரியர் கல்விப் பயணத்தில் வாண்மைத்துவம் எனும் திறனைக் கற்றுக் கொண்டு தரம் I இற்கு பதவிஉயர்வு பெறுகின்ற இந் நிகழ்ச்சியின் கதாநாயகர்களான ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள் உரித்தாவதுடன், வினைத்திறன் மிக்க வகையில் மாணவர்களுக்கு கல்வியை கொண்டு சேர்க்கும் தங்களது ஆசிரியப் பணிகளை இன்னும் மேம்படுத்தி சிறப்புற செய்வீர்கள் என்ற அவாவுடன் உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகளும் உரித்தாகட்டும்...
🔸🔸🔸
ஒரு வெற்றுத்தாளாய் பாடசாலைக்கு காலடி எடுத்து வைக்கும் மாணவர்களை, ஒரு புத்தகமாய் வெளிக்கொணருபவர்கள் ஆசிரியர்கள். அவ் ஆசிரியர்களின் வாண்மையில் விருத்தியை ஏற்படுத்துவதன் மூலம் வினைத்திறன்மிகு ஆசிரியராக மாறி, ஒரு சிறந்த மாணவர் சமூகத்தை உருவாக்க தொடர்ந்தும் சேவையாற்றுவோம். 🔸🔸🔸
Mr. A. Riyas (SLTES)
Manager,
Professional Development Center for Teachers - Kattankudy
Comments
Post a Comment