Skip to main content

2-II ஆசிரியர்களுக்கான EB Module நிறைவு பெறுதலும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் - 25.07.2023

 07வது ஆசிரியர் மாநாடும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்


















மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஆசிரியர் வான்மை விருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில் ஏழாவது ஆசிரியர் மாநாடும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் காத்தான்குடி ஆசிரியர் வான்மை விருத்தி நிலையத்தில் (25 )செவ்வாய்க்கிழமை  ஆசிரியர் வள நிலையத்தின் முகாமையாளரும் பிரதான விரிவுரையாளருமான ஏ. ரியாஸ் (SLTES) அவர்களின் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் ஆசிரியர்களுக்கான வினைத்திறன் தடை தாண்டலுக்கான இத வடிவங்களைப்  பூர்த்தி செய்து வான்மை விருத்திப்  பயிற்சி பெற்றுக் கொண்ட ஏழாவது தொகுதி ஆசிரியர்களை கௌரவிக்கும் வகையிலேயே மேற்படி சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் ஆசிரியர் மாநாடும் விமர்சையாக இடம் பெற்றது.

நிகழ்வின் அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம். ரமீஸ் (SLEAS), காத்தான்குடிக்  பிரதேசக்கல்விப்  பணிப்பாளர் ஏ.ஜி.எம். ஹகீம் (SLEAS), தமிழ் பாடத்துக்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம். முபாஸ்தீன் (SLEAS), ஆரம்பக் கல்விப் பிரிவின் ஆசிரிய ஆலோசகர் திருமதி தஸ்லிமா ரிஸ்வி, காத்தான்குடியின் முக்கிய  சமூக செயற்பாட்டாளர்  அல்ஹாஜ் முஜீப் ஜுனைத்  ஆகியோர் கலந்து சிறப்பித்ததோடு ஆசிரிய வள நிலையத்தின் சிறப்பான செயற்பாடுகள் தொடர்பாகவும் ஆசிரியர்கள் எதிர்காலத்தில் செயற்பட வேண்டிய விதம் தொடர்பாகவும் சிறப்புரைகளும் இடம்பெற்றன.

நிகழ்வில் சான்றிதழ் பெற்றுக் கொண்ட ஆசிரியர் குழாமினால் உரைகள், பாடல்கள், கவிதைகள் என பல்சுவை நிகழ்வுகள் இடம் பெற்றதோடு நிகழ்வின் முக்கிய அம்சமாக ஆசிரியர் தரம் 2-II க்கான வினைத்திறன் தடை தாண்டல் இத வடிவங்களைப்  பூர்த்தி செய்தமைக்கான சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்ட ஆசிரியர் குழுவினர் தமக்கு வான்மையை விருத்தி செய்வதற்கு உதவிய வலயத்தின் முகாமையாளரும் பிரதான விரிவுரையாளருமான ஏ. ரியாஸ் (SLTES) அவர்களை கௌரவித்ததோடு வள நிலையத்துக்காக அன்பளிப்புகளையும் வழங்கி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

Comments

Popular posts from this blog

2-II ஆசிரியர்களுக்கான EB Module நிறைவு பெறுதலும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் - 28/02/2023 செவ்வாய்க்கிழமை

" ஆசிரியர்களை கௌரவிப்போம்." எனும் தொனிப்பொருளில் எமது காத்தான்குடி ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தில் இடம்பெற்ற ஆசிரியர்களைப் பாராட்டி, சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு 28/02/2023 -----------------------------------------------------------------------------------------------------------------------------இலங்கை ஆசிரியர் சேவையின் புதிய பிரமாணக் குறிப்பிற்கமைய 2-II தரத்திலுள்ள ஆசிரியர்களின் பதவியுயர்வுக்கான இரண்டாம் வினைத் திறமைகாண் தடைப்பரீட்சைகளின் இதவடிவங்கள் (Efficiency Bar Examination Module) நிறைவுபெறுதலும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் காத்தான்குடி ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தில் (காத்தான்குடி ஆசிரியர் மத்திய நிலையம்) 28/02/2023 செவ்வாய்க்கிழமைஅன்று முகாமையாளர் Mr. A. Riyas (SLTES) தலைமையில் இடம்பெற்றது..  மேலும் இந் நிகழ்விற்கு அதிதியாக, மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர்களான Mr. SMM. Ameer (SLEAS-I) அவர்களும் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஆரம்பப் பிரிவு ஆசிரிய ஆலோசகர்  Mrs. Thasleema Mohamed Rizvi (ISA) அவர்களும் கலந்து சிறப்பித்ததுடன் ...

ஆசிரியர்களுக்கான EB Module (2-II) நிறைவு பெறுதலும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் - 1ஆம் கட்டம் 25.06.2024 (செவ்வாய்க்கிழமை)

இலங்கை ஆசிரியர் சேவையின் புதிய பிரமாணக் குறிப்பிற்கமைய 2-II தரத்திலுள்ள ஆசிரியர்களின் பதவியுயர்வுக்கான இரண்டாம் வினைத் திறமைகாண் தடைப்பரீட்சைகளின் இதவடிவங்கள் (Efficiency Bar Examination Module) நிறைவுபெறுதலும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வின் முதலாம் கட்டம் காத்தான்குடி ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தில் (காத்தான்குடி ஆசிரியர் மத்திய நிலையம்) 25/06/2024 செவ்வாய்க்கிழமை அன்று முகாமையாளர் Mr. A. Riyas (SLTES) தலைமையில் இடம்பெற்றது..  Professional Development Center for Teachers - Kattankudy 

ஆசிரியர்களுக்கான EB Module (2-II) நிறைவு பெறுதலும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் - 2 ஆம் கட்டம் 27.06.2024 (வியாழக்கிழமை)

ஆசிரியர்களின் கௌரவத்தை நோக்கிய அடிப்படையில் காத்தான்குடி ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தில் இருந்து இவ்வருடம் E.B.  நிகழ்ச்சி திட்டத்தை நிறைவு செய்த 170  ஆசிரியர்களுக்கான கௌரவிப்பு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கடந்தவாரம் ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையைத்தின் நிறைவேற்றுத்தர முகாமையாளரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான எ.றியாஸ் அவர்களின் தலைமையில்  நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பணிப்பாளர் எம்.எம்.ஜவாத் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன் கௌரவ அதிதிகளாக பிரதி கல்வி பணிப்பாளர்கள், கணக்காளர்கள் பொறியியலாளர்கள், விரிவுரையாளர்கள், ஏறாவூர் லயன்ஸ் அணியினர்கள் மற்றும் சமூக  நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.