எமது காத்தான்குடி ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தில் EB Module களைப் பூர்த்தி செய்துள்ள 70 ஆசிரியர்களுக்கான சான்றிதழ் வழங்கல்
E.B. தடை தாண்டல் பரீட்சையை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ் பங்கேற்பு.
காத்தான்குடி ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தின் ஆசிரியர் மாநாடும் E.B. தடை தாண்டல் பரீட்சையை நிறைவு செய்த 70 ஆசிரியர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் நேற்று இடம்பெற்றது.
ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தின் முகாமையாளர் ஏ. றியாஸ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ் பிரதம அதிதியாக பங்கேற்று சிறப்பித்தார்.
நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் உதவிக்கல்விப்பணிப்பாளர் எம். முபாஸ்தீன், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஏ.பி.எம். றசீம், சமூக செயற்பாட்டாளர் ஏ.எல். மும்தாஸ் (மதனி), முன்னாள் ஆளுநரின் இணைப்புச்செயலாளர் றுஸ்வின் முஹம்மட் உள்ளிட்ட ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தின் உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
_______
Mr. A. Riyas (SLTES)
முகாமையாளர்
ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையம் - காத்தான்குடி
_______
Comments
Post a Comment