காத்தான்குடி ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தின் E.B. தடை தாண்டல் பரீட்சையை நிறைவு செய்த ஆசிரியர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் நேற்று இடம்பெற்றது. ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தின் முகாமையாளர் A. Riyas (SLTES) தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் Mr. MM. Jawad (SLEAS) அவர்களும் பங்கேற்று சிறப்பித்தார். நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் உதவிக்கல்விப்பணிப்பாளர் எம். முபாஸ்தீன், உள்ளிட்ட ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தின் உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.